உலக அறிவாளிகளே, நல்லவர்களே, உண்மையானவர்களே.
நாம் அழியா தன்மையனாய், ஆதி அந்த மற்றவனாய், சதா ஆனந்த சொர்பனாய், அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்டவனாய் இருந்தோம். கடவுளின் கருனையால் அவரது படைப்பின் அழகைப் பார்த்து ரசித்து அனுபவித்து, எவ்வளவு காலம் இந்த உலகில் வாழ வேண்டுமோ அவ்வளவு காலம் இந்த உடலுடன் வாழ்ந்து, உலகத்தை நன்றாக புரிந்து கொண்டு உடல் அழியு முன்னே இந்த உடலை காய கற்ப உடம்பாக மாற்றி மீண்டும் கடவுள் நிலை அடையவே நாம் பிறந்துள்ளோம். அந்த நிலையினை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கவும், எங்களுக்கு தெரிந்த அனுபவ அறிவை பகிர்ந்து கொள்ளவும் இத் தளம் அமைக்கப் பட்டுள்ளது.
மருத்துவ சிகிட்சை பெற நினைப்பவர்கள் E-MAIL மூலம் விவரங்களை
அன்ப்புவது நல்லது. இருப்பினும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுவது மிகவும் நல்லது. இரண்டு வழிகளிலும் தொடர்பு கொள்ளுவது மிகவும் சரியான முறையாகும். நாங்கள் இரவு பகல் என்று பாராமல் பதிலளிக்க உள்ளோம். மருத்துவ சேவையினை புணிதமானதாக கருதி செய்து வருகிறோம்
மேலும் சலன படங்கள் காண எங்களது கிழ்கண்ட வலைத் தளத்துக்கு செல்லவும்.
.
www.siddharworld.com
or
www.vsiddharworld.com
நோக்கம்
முப்பு, முப்பூ, ரசவாதம், ரசமணி, சித்த மருத்துவம், அமுரி, பூநீறு, பிராணாயாமம், யோகம், சாகாக் கலை, சித்துக்கள், கரு நொச்சி, காயக் கற்பம், பரியங்க யோகம், நோக்கு வர்மம், இவைகளைப் பற்றி அடிபடை யான கருத்துக்களை புரிந்து கொள்ளவும், இவைகளை தன் அனுபவத்தில் கொண்டு வரவும், எங்களுக்கு தெரிந்த அனுபவ அறிவை பகிர்ந்து கொள்ளவும் இத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தவறான வழி காட்டும் போலி குருக்களை நம்பி இந்த பொன்னான பிறவினை பாழ்படுத்தி கொள்ள வேண்டாம் என்பதை நல்ல வர்களுக்கு தெரிவிக்கவே இத் தளம் அமைக்கப் பட்டுள்ளது.
இத் தளத்தில் உள்ள "சித்தர்கள் பேறறிவாளர்கள் கருத்துக்களம்" பகுதிலுள்ள ஒரு சில வாக்கியங்களுக்கு சரியான விளக்கம் அளிப்பவர்களுக்கு சித்தர்களின் பாடல்கள் கொண்ட CD களோ அல்லது அனுபவ அறியுடையோர்கள் எழுதிய ரசவாதம், வாசி யோகம் சம்பந்தமான புத்தகங்களோ பரிசாக அளிக்கப்படும்.
இது எங்களது புலமையினை பறைசாற்ற எழுதப் பட்டதல்ல. உங்கள் சிந்தனையினை தூண்டி விட்டு தெளிவு பெற நாங்கள் செய்யும் முயற்ச்சியாகும்.
மேலும் சிறப்பான பதில் அளிப்பவர்களுக்கு எங்களை நேரில் சந்தித்து பேசவும். அதற்க்கான விளக்கம் (தீட்சை) பெறவும் வாய்ப்பளிக் கப்படும் என்பதை மிக்க மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
www.vsiddharworld.com
www.siddharworld.com
அம்மா, அண்ணி, அக்கா, தங்கை, அத்தை, மாமா, அப்பா, சித்தி அண்ணன், தம்பி அனைவரும் சேர்ந்து பார்க்க வேண்டியது இது.
To contact
e-mail ; vthegreatvp@gmail.com
Phone; 93 600 98 510.
சிறப்பு திறனாய்வுகள் - பரிசுகள்.
சின்முத்திரை - ஓர் விளக்கம் .
குரு தட்சணா மூர்த்தி தனது வலகரத்தில் சின்முத்திரை காட்டி ஜனகாதிகளுக்கு உபதேசம் செய்ததாகவும், உடனே அவர்கள் அதன் பொருளை அறிந்து கொண்டார்கள் என்று சொல்லப் படுகிறது . கடவுள்களும் சின்முத்திரை காட்டிய நிலையில் உள்ள சிலைகளை காண்கிறோம். யோகா ஆசிரியர்கள் சின்முத்திரை காட்டி விளக்கம் கொடுப்பதை அறிவோம்.
இதன் உண்மை பொருளை விளக்குபவர்களுக்கு (யாராயினும் சரி) ரச மணி கட்டும் வித்தை, அல்லது பூ நீர் எடுக்கும் முறை கற்று தரப்படும். அல்லது நத்தை சூரி மூலிகையிணை அறியும் விதமும், அதை பயன் படுத்தும் விதமும் காட்டி கொடுக்கப்படும்.
ரசவாதம், வாசி யோகம் பற்றிய பாடல் தொகுப்பு.
இரசவாத கலை, சித்த மருத்துவத்தின் இரகசியங்களை வெளி கொணரும் பாடல்களின் தொகுப்பு விரைவில் வெளிவரும் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
"சித்தர்கள் பேரறிவாளர்கள் கருத்து களம்" தலைப்பில் தமிழ், சிவ யோகம் சம்மந்த மான வற்றை எழுதி வந்துள்ளோம். அவைகளுக்கு இதுவரை யாரும் சரியான விடைகளை தெரிவிக்க வில்லை. தொடர்ந்து அவைகளை பார்த்து வாருங்கள். அதற்கான விடைகள் ஆங்காங்கே சலன படங்களிலும், மற்றும் கட்டுரைகளிலும் வெளியிடப் படும். அதனால் எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லா வற்றையும் பார்வையிடவும்.
இனி வருபவை இரசவாதம், சித்த மருத்துவம் பற்றிய கருத்து களம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சவத்தின் சடங்குகள். பரிசுகள்.
சித்தர் உலகின் ஆர்வலர்களின் வேண்டு கோளுக் கினங்க ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவரது உடலுக்கு புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கு முன்னோ பின்னோ பல சாங்கியம் சடங்குகள் செய்கிறார்கள். அது எதற்கு என்றால் அவர் என்ன செய்ய மறந்ததால் அவர் செத்தாரோ அதை நினைவு படுத்தவும், அதை பார்த்து கொண்டுள்ள மக்கள் தாமும் அந்த தவறை செய்யாமலும், தான் சாகாமல் இருக்கும் வழியினை தெரிந்து கொள்ளவும் அதை செய்கிறார்கள். அதன் உண்மை பொருளை விளக்கும் முகமாக ஒரு சலனப் படத்தை வெளியிட யுள்ளோம் என்பதனை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒருவர் இறந்து விட்டால் அவருடைய சவத்திற்கு பல சடங்குகளை செய்கிறார்கள். அதன் பொருள் என்ன என்பதை விளக்க
அவர்கள் யாராயிருப்பின் அதன் பொருளை விளக்கலாம். அவர்களுக்கு பரிசு உண்டு. தங்களுக்கு தெரியாவிட்டால் அத்துறையிலே மூழ்கியுள்ள நிபுணர்களை கேட்டு எழுதலாம். இதன் பொருளை தெரிந்து கொண்டாள் சாகா கலை அறிந்தவர்கள் ஆவோம்.
சடங்குகள் ; அரைஞான் கயிர் முதல் அனைத்து ஆபரனங்களையும் அகற்றிவிடல். முக சவரம் செய்தல்.
இரண்டு கால்களின் பெரு விரல்களையும் ஒன்றாக சேர்த்து கயிர் கொண்டு கட்டுதல்.
இரண்டு மூக்கு துவாரங்களை பஞ்சு கொண்டு அடைத்தல்.
நெற்றில் காசு வைத்தல்.
சவத்தை பாடமாத்திவரை வீட்டை நோக்கி பார்த்தப்படியும். பின் வடக்கு நோக்கியும் எடுத்து செல்கிறார்களே ஏன்/
முன்றாம் நாள் பால் தெளிதல். மற்றும் இவை போன்றவைகள்.
இதன் உட்பொருளை அறிந்து அதை கடைபிடிக்கா விட்டால், சாங்கியம் சடங்கு, நம்பிக்கை உடையவருக்கும், அதை செய்பவர்களுக்கும் எந்த ஒரு நன்மையும் இல்லை.
இதன் உண்மை பொருளை உணர்ந்து , நாத்திகர்களும் கடை பிடித்தால் அவர்களும் சாகா உடலை அடைவார்கள்.
கிருத்துவர்கள், முஸ்லிம்கள் புத்த மதத்தினர் மற்றும் அனைத்து மதத்தினர் எந்த நாட்டு மக்களாலும் அவர்கள் அடைவேண்டியத்தை முழுமையாக பெறுவார்கள்.
.
www.vsiddharworld.com
www.siddharworld.com
அம்மா, அண்ணி, அக்கா, தங்கை, அத்தை, மாமா, அப்பா, சித்தி அண்ணன், தம்பி அனைவரும் சேர்ந்து பார்க்க வேண்டியது இது.
To contact
e-mail ; vthegreatvp@gmail.com
Phone; 93 600 98 510.
காதலர் தின பரிசு
உலகம் முழுதும் காதல் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. உலகத்தின் வரலாற்று காலம் சுமார் 5000 ஆண்டுகள் என்று சொல்லுகிறார்கள் இந்த வரலாற்றை கூர்ந்து கவனித்தால் பெருபாலும் அரசர்களும், கொடுங்கோல் ஆட்சியும், போர்களங்கலாகவும், மக்கள் அடிமைகளாகவும் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது ஏதோ அத்தி பூத்தற்போல் நல்லது நடந்ததாக தெரிகிறது .
1950 ம் ஆண்டு முதல் 1967 ம் ஆண்டு வரை உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிற சூழ்நிலை இந்திய மக்களுக்கு உருவானது.
( கற்காலம் என்பது அனுமானம் உண்மை அல்ல. இன்றும் கற்கால மனிதராக வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் உலகில் உள்ளனர்.)
சங்க காலத்தில் தமிழர்களின் காதலைப் பற்றி பேசாத இலக்கியமே இல்லை என்று சொல்லலாம். உலகிலே உண்மையான காதலை அனுபவித்தவர்கள் தமிழர்களே. கரை கண்டவர்கள் என்று கூட சொல்லலாம். ( உலகில் எங்கோ சிலப்பேர் உண்மை காதலை அனுபவித்திருக்கலாம்.) உண்மை காதலைப் பற்றி சிறு கட்டுரை விரைவில் வெளிவரும்,
திருக்குறள் ஒரு நான்கு வரியில்.
ஈதல் அறன் தீவினை விட்டு
ஈட்டல் பொருள் என்னான்றும்
காதலில் இருவர் கருத்தொருமித்து
ஆதரவு பட்டதே இன்பம்.
பரனை நினைத்து இம் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
இதற்க்கு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
ஒளவையார் பாடலிது.
திருவள்ளுவர் 1330 குறளில் அறம், பொருள், இன்பம், வீடு பேறு பற்றி எழுதியுள்ளார். (திருக்குறளில் வீடுபேறு இல்லை என்பார்கள் அறியா மூடர்கள் சிலர், அதைப் பற்றி பின்னால் பார்ப்போம்.) ஆனால் ஒளவையார் நான்கு வரில் ரத்தன சுருக்கமாக அறம், பொருள், இன்பம் வீடு பேறு பற்றி கூறியுள்ளார்கள். நன்றாக சிந்திக்கவும்.
இந்த வலை தளத்தின் நோக்கம், நாம் சீவன் முக்தன் நிலை அடைந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் இறை நிலை அடைதல் பற்றியதாகும்.